Monday, March 18, 2013

ஆணாக மாறியம்பெண், தாயாரின் தோழியை காதலித்து திருமணம்

பிறவியிலேயே பெண்ணாக பிறந்த ஒருவர், அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி, தனது தாயாரின் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் விசித்திர சம்பவம் ஒன்று இங்கிலாந்து நட்டில் நடந்துள்ளது. காதலுக்கு கண் மட்டும் இல்லை விவஸ்தையும் இல்லை என்கிற கூற்று இவர்கள் வாழ்க்கையில் உண்மையாக மாறியுள்ளது. பெண் குழந்தையாக பிறந்த பாபி பிரான்சிஸ் (வயது 19) என்பவர் ஆண் மகனாக விரும்பினார். இதற்காக கடந்த 2 ஆண்டாக சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் வாலிப மிடுக்குடன் உடை அணிந்து வலம் வருகிறார். விரைவிலேயே அவர் அறுவைசிகிச்சை நடத்தி முழு ஆண் தகுதி பெற இருக்கிறார். பாபி சமீபத்தில் தனது தாயாருடைய தோழி டோனாவை (31) ஒரு சிற்றுண்டி சாலையில் சந்திக்க இருவருக்கும் இடையே திடீர் காதல் அரும்பியது. பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்க காதல் முற்றிப்போய் இணைபிரியா ஜோடியாகி விட்டார்கள். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பாபி 5 வயது குழந்தையாக இருந்த போது டோனாவின் மடியில் தவழ்ந்தவர். மேலும் அவர் 3 குழந்தைக்கு தாய் வேறு. காதலுக்கு கண் இல்லை என்பது இதுதானோ தெரியவில்லை. தற்போது இந்த ஜோடி தங்களது கைகளில் காதலர் பெயரை பச்சைக்குத்தி இருக்கிறார்கள். திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

No comments: