Sunday, March 17, 2013

விபச்சாரத்தில் மூன்று லட்சம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்திய இரட்டை சகோதரிகள் ஓய்வு.

நெதர்லாந்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, "செக்ஸ்' தொழிலில், ஈடுபட்டு வந்த, இரட்டை சகோதரிகள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர்.நெதர்லாந்தின் தலைநகர், ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும், லூயிஸ் மற்றும் மார்ட்டின் போக்கன்ஸ்; இரட்டை சகோதரிகள். இவர்கள், விபசார தொழிலில், மூன்று லட்சம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். 70 வயதான இவர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். தங்கள் அனுபவங்கள் குறித்து, அவர்கள் கூறியதாவது:இளம் வயதில், எங்கள் மீது நடத்தப்பட்ட, பாலியல் வன்முறைகளை தவிர்க்க, வேறு வழியின்றி, விபசார தொழிலில் ஈடுபடத் துவங்கினோம்.நாங்கள் இருவரும், எப்போதும் ஒரே மாதிரியான உடையை, குறிப்பாக, சிவப்பு நிற ஆடை அணிவோம்.கடந்த, 2000ம் ஆண்டு, நெதர்லாந்தில், விபசார தொழிலுக்கு, அரசு அங்கீகாரம் கிடைத்தது. இதற்கு முன், மாபியா கும்பலின் கட்டுப்பாட்டில், இத்தொழில் இருந்தது.அங்கீகாரம் கிடைத்தாலும், செக்ஸ் தொழிலாளிகள், அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது. இதனால், பல பெண்கள், வீட்டிலிருந்தே, "இன்டர்நெட்' மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.முதுமையால் ஏற்பட்டுள்ள மூட்டு வலி காரணமாக, நாங்கள் தற்போது, ஓய்வு பெற்று விட்டோம்.இவ்வாறு, இரட்டை சகோதரிகள் கூறினர்.

No comments: