Sunday, February 21, 2010

செக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்


செக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
குறைந்த அளவிலான செக்ஸ் ஆர்வம் மற்றும் விரக்தியுடன் கூடிய 5098 பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை இக்கழகம் நடத்தியது. அதில், செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ள பெண்களிடையே விரக்தி அதிகம் இருந்ததாம். பலருக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியே இல்லாத நிலையும் காணப்பட்டதாம்.
மேலும் தங்களால் செக்ஸ் வாழ்க்கையில் பூரணமாக ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் இருந்ததாம்.
இந்தப் பெண்களின் பல்வேறு குணாதிசயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அவர்கள் கடந்த 12 மாதங்களில் செக்ஸ் விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், அந்த காலகட்டத்தில் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது. செக்ஸ் வைத்துக் கொள்ளாதபோது அவர்களிடம் விரக்தித் தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பது உள்பட பல அம்சங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
ஆய்வின் முடிவில், செக்ஸ் வைத்துக் கொள்ளாத சமயங்களில் அல்லது செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த சமயங்களில் இவர்கள் பெருமளவில் விரக்தியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தபோதெல்லாம் இவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் இருந்ததாகவும் ஆய்வு கூறுகிறது.
இயல்பான செக்ஸ் வாழ்க்கை உடையவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவே வருவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது

Tuesday, February 16, 2010

செக்ஸை விரும்பாத பெண்கள்!


35 வயதைத் தாண்டிய பெண்களில் கணிசமானவர்கள் செக்ஸ் உறவை விட்டு விலகிப் போய் விடுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் நான்கில் ஒருவர் செக்ஸ் வாழ்க்கையை விரும்பவில்லை என்று பதிலளித்துள்ளனராம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்துக் கணிப்பை நடத்தியவர்களில் ஒருவரான கொலீன் நோலன் கூறுகையில்,
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 28 சதவீதம் பேர் காதல், காமம் என்பதெல்லாம் பழைய கதை என்று கூறினர்.
35 முதல் 64 வயதுக்குட்பட்ட 745 பெண்களிடம் சர்வே எடுக்கப்பட்டது. அதில் குழந்தைப் பேறு இல்லாத பெண்களிடம், குழந்தை பெற்ற பெண்களை விட ஆர்கசம் அதிகம் இருப்பதாக தெரிய வந்தது.
41 சதவீதம் பேர் அடிக்கடி தங்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
ஒரு குழந்தை வைத்துள்ள தாய்மார்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே முழுமையான திருப்தியை செக்ஸ் மூலம் அடைந்ததாக கூறினர்.
2 குழந்தைகளுக்குத் தாயான பெண்களில் 14 சதவீதம் பேர் ஓரளவு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாக தெரிவித்தனர்.
பகுதி நேரமாக வேலை பார்க்கும் பெண்களில் 67 சதவீதம் பேருக்கு அதிக அளவில் ஆர்கசம் வருவதாக தெரிவித்தனர். முழு நேர வேலையில் உள்ள பெண்களில் 57 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம்.
மெனோபாஸ் பயம் பெண்களிடையே அதிக அளவில் உள்ளதாம். 42 சதவீதம் பெண்கள் இதை நினைத்து தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக குறிப்பிட்டனர்.
நடுத்தர வயது முதல் முதிய வயதையொட்டிய பெண்களுக்கு பல்வேறு வகையான உடல் நலக் கோளாறுகள் காணப்படுகின்றன. இருப்பினும் இதை யாரிடமும் போய்ச் சொல்ல அவர்கள் விரும்புவதில்லை.
காரணம், தயக்கம்தான்.
அதேபோல 35 வயதைத் தாண்டி விட்ட பின்னர் செக்ஸ் வாழ்க்கையில் பெண்களுக்கு ஒருவித அலுப்பு வந்து விடுவதும் தெரிய வந்துள்ளது என்றார் நோலன்.

Wednesday, February 10, 2010

அமோகவிற்பனை


காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம்.
காதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை உயர்த்த தேவையான அனைத்து வழிகளையும் கையாள்கின்றனர்.
ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவித்தார்.
காதலர் தினத்தையொட்டி சில சலுகைகளையும் மிக்லானியின் நிறுவனம் அறிவித்துள்ளதாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆணுறைகளை வாங்கினால் இலவசமாம். மேலும் வேல்யூ ஆடட் பேக்கேஜ்களையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு ஆணுறை வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல.
சுப்லால் என்ற மருந்துக் கடை உரிமையாளர் கூறுகையில், சிலர் கூச்சப்பட்டுக்கொண்டு போன் மூலமாக ஆர்டர் கொடுப்பார்கள். சில இளைஞர்கள் கடைக்கு வந்து தயக்கத்துடன் கேட்பார்கள். எப்படியானாலும் ஆணுறை விற்பனை இந்த சமயத்தில் கூடுதலாகவே இருக்கும் என்றார்.
சமீபத்திய சர்வேக்கள் இந்திய ஆண்களும் பெண்களும் பாதுகாப்பான உடலுறவு விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வு அடைந்துவிட்டதாக கூறுகின்றன.
ஆண்களைப் போலவே பெண்களும் கருத்தடை மாத்திரைகளை கூச்சமின்றி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதோடு, ஆன் லைன் வர்த்தகம் பெருகி விட்ட சூழலில் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் பெறுவது சுலபமானதாகவும், நடைமுறை சிக்கலின்றி இருப்பதாகவும் கருதுகின்றனர்.

Monday, February 8, 2010

சத்தமில்லாதசெக்ஸ்


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விடுதியொன்றில் தங்கியுள்ள மாணவிகளுக்கு விநோதமான பணிப்புரையொன்று விடுக்கப்பட்டுள்ளது. செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது அதிகமாக சத்தமிடாதீர்கள் என்பதுதான் அந்தப்
பணிப்புரை.
இப்பல்கலைக்கழகத்தின் நிவ்ன்ஹாம் பெண்கள் கல்லூரியில் சுமார் 400 மாணவிகள் கல்வி கற்கின்றனர். இளமாணி கற்கைநெறியில் ஈடுபட்டுள்ள இம்மாணவிகள் அனைவருக்கும் அண்மையில் மின்னஞ்சல் மூலம் நிர்வாகத்தினரால் மேற்படி உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
139 வருடகால வரலாற்றைக் கொண்ட இக்கல்லூரியில் மாணவிகளின் அறையில் அவர்களின் காதலர்கள் 2 நாட்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்பின் அவர்கள் வேறு அறையொன்றைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டுமாம்.
இத்தகைய நடவடிக்கைகள் தமக்கு இடைஞ்சலாக இருப்பதாக கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 30 மாணவிகள் நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்ததையடுத்தே அனைவருக்கும் பொதுவாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மூலமான அறிவுறுத்தலை வாசித்த மாணவிகள் பலர் தம்மை இலக்காகக் கொண்டே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக கருதுவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்கவிடவேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
20 வயதான மாணவியொருவர் இது குறித்து கூறுகையில்,
மற்றவர்கள்
அதையெல்லாம் செவிமடுக்கிறார்கள் என்று அறிவது மிகவும் சங்கடமானது. விடுதி அறையின் சுவர்கள் மெல்லியவை என்பதை மறந்துவிடுகிறோம் எனக் கூறுகின்றனர்

Thursday, February 4, 2010

கற்புவாங்கலையோ கற்பு


நியூசிலாந்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ஏலத்திற்கு விட்டார். அதை ஒருவர் 36,000 டாலருக்கு ஏலம் கேட்டார். அதை இந்தப் பெண் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவர் நார்த்லேன்ட் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி. தன்னை யுனிகேர்ள் என்று பெயரில் அடையாளம் காட்டியுள்ளார். முழு விவரங்களை வெளியிடவில்லை. நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு இணையதளத்தில், தனது படிப்புச் செலவுக்காக, தான் பாதுகாத்து வரும் கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தார்.
இந்த ஏலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். இதுகுறித்து அந்தப் பெண் வெளியிட்டுள்ள செய்தியில், எனது விளம்பரத்தைப் 30,000 பேர் பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. அவர்களில் 1200 பேர் ஏலம் கேட்டிருந்தனர். அவர்களில் 45,000 நியூசிலாந்து டாலருக்கு (அமெரிக்க டாலரில் 36,000) ஏலம் கேட்டவரை நான் தேர்வு செய்துள்ளேன். இது நான் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத தொகையாகும் என்று கூறியுள்ளார் அவர்.
இப்படிப்பட்ட விளம்பரத்தை பிரசுரித்தது குறித்து அந்த இணையதளம் நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அது கூறுகையில், ஒவ்வொருவரும் தங்களது பொருளை ஏலம் விடுவதற்கு உரிமை உண்டு. கன்னித்தன்மையும் கூட ஒருவரின் பொருள் போலத்தான். எனவே இதை ஏற்க முடியாது என்று நாங்கள் மறுக்க முடியாது என்று கூறியுள்ளது அது.
முன்னதாக யுனிகேர்ள் கொடுத்திருந்த விளம்பரத்தில், நான் பார்க்க கவர்ச்சிகரமாக இருப்பேன். ஒருமுறை கூட நான் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதில்லை. இன்னும் கன்னித்தன்மையுடன் இருக்கிறேன். இதை தற்போது நான் ஏலம் விடுகிறேன்.
இது நான் முழு மனதுடன் எடுத்த மிகத் தெளிவான முடிவு. மிகவும் சுகாதாரமாகவும், உடல் ரீதியாக நல்ல நலனுடனும் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உடலில் எந்தவிதமான மருத்து ரீதியான பிரச்சினைகளும் இல்லை. உடலை வனப்புடனும், திடகாத்திரமாகவும் வைத்துள்ளேன் என்று கூறியிருந்தார்.

Monday, February 1, 2010

வயாக்கராவிக்குப்பதிலாக‌

அர்ஜென்டினா அதிபர் மாளிகையில் வர்த்தகர்களின் கூட்டம் நடந்தது. இதில், அந்நாட்டு பெண் அதிபர் கிறிஸ்டினா கிர்ச்னர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது செக்ஸ் ஆர்வத்தை தூண்டுவதற்காக வயாகரா மாத்திரை பயன் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பன்றி இறைச்சி அதை விட மிகச்சிறந்தது. இது சாதாரண விஷயமல்ல.

வறுக்கப்பட்ட பன்றிக்கறியில் தான் வயாகராவை விட “செக்ஸ்” உணர்வை தூண்டும் சக்தி உள்ளது. அதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன்.

தென் அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் வார இறுதியில் விருந்து நடைபெறும். இதில் நான் எனது கணவரும், முன்னாள் அதிபருமான நெஸ்டன் கிர்ச்னாவும் கலந்து கொண்டு வறுத்த பன்றி இறைச்சியை ருசித்து மகிழ்வோம்.

இதன் மூலம் வாரம் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும். எனவே இதை பரிசோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

டென்மார்க், ஜப்பான் போன்ற நாடுகளில் பன்றி இறைச்சியை தான் அதிக அளவில் மக்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் அர்ஜென்டினாவில் மாட்டு இறைச்சி தான் அதிக அளவில் விரும்பி சாப்பிடப்படுகிறது.

எனவே அதிபர் கிறிஸ்டினா கூறியது போல, இங்கும் பன்றி இறைச்சியை சாப்பிட்டு மக்கள் இன்புற்று வாழ வேண்டும் எனபன்றி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்