Sunday, March 8, 2009

கேமரா பேனா அபாயம்


கேமரா பேனாக்கள் விற்பனைக்கு வந்துள்ளதால் விஷமிகளிடமிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளம்பெண்கள் உஷாராக இருக்க வேண்டும். மொபைல் போன் மூலம் இளம் பெண்களை ரகசியமாக படம் எடுத்த சில விஷமிகளுக்கு வசதியாக தற்போது கேமரா பேனாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமான தோற்றத்தில் இருக்கும் பேனாவில் புள்ளி அளவில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. பேனா மேல் பகுதியை அழுத்தியதும் "ரெக்கார்டிங்' உறுதி செய்யப்படும்.


இதன் மூலம் சகஜமாக பேசியபடி எதிரில் நடப்பதை ஆடியோவுடன் கூடிய வீடியோவாக பதிவு செய்யலாம். தைவான் நாட்டு தயாரிப்பான இதில் "2 பிக்சல்" கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் "4 ஜி.பி., முதல் 8 ஜி.பி., " வரை பதிவு கொள்ளலாம். யு.எஸ்.பி., போர்ட் மூலம் "சார்ஜ்' செய்வதுடன் வீடியோவும் "டவுன்லோடு" செய்யலாம். தமிழகத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த பேனாவின் விலை 7 ஆயிரத்து 500 ரூபாய் இளம் பெண்களே கேமரா பேனா விஷமிகளிடம் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள உஷாராக இருங்கள் .

No comments: