Friday, February 13, 2009

இலங்கையருக்கும் பெருமை சேர்க்கும் மாயா







ஒஸ்கார் விருது வழங்கும்விழா இந்தியருக்கு மாத்திரமல்ல இலங்கையருக்கும்முக்கியமானதாக உள்ளது.ஹொலிவூட்டில்உயரிய விருதாக கருதப்படும்ஒஸ்கார் விருதுக்கு இம்முறை மும்பை சேரிவாழ்சிறுவனை மையமாகக்கொண்டுஇயக்கப்பட்ட ஸ்லம்டோக்மில்லியனர்திரைப்படம்10 பிரிவுகளில்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இசைப்புயல்.ஆர்.ரஹ்மானின் பெயரும் ஒஸ்காருக்குபரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் இந்தியர்கள்ஆனந்த வெள்ளத்தில்மூழ்கியுள்ள அதேவேளைஇலங்கையரானநாமும் ஒஸ்கார் விருது குறித்துமகிழ்ச்சியடைய வேண்டும்ஏனெனில் இத்திரைப்படத்தில்வரும் ஒ சயா பாடலை
எழுதி பாடிய மாயாஅருள்பிரகாசம்இலங்கையில் பிறந்தவராவார்.இவர் தற்போது இலண்டனில்வாழ்ந்து வருகின்றார்.ஏ.ஆர்.ரஹ்மானைஅறிந்தளவுக்கு மாயாவைஎம்மவர்கள் அறிந்திருக்கவாய்ப்பில்லையென்றாலும்அவரைப் பற்றியும் அவர்சாதித்தவையைப் பற்றியும்நாம் கதைக்காமலிருக்கமுடியாது.
கடந்த ஜனவரி மாதம்வாஷிங்டனில் இடம்பெற்றஇசைநிகழ்ச்சியொன்றில்மேலைத்தேய பாணியில்பல பாடல்களை பாடியமாயா இறுதியில் ஈழத்தமிழ்மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதையும் அவர்கள் எதிர்கொள்ளும் அவலம் குறித்துவெளிப்படுத்தும் விதமாகஅழுதவாறு ஒரு பாடலைபாடினார். அவரது இந்தபாடல் உலகத்தையே கலங்கச்செய்தது. இதற்கமைய அவர்பாடலை பாடி முடிக்க இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் போரை நிறுத்துமக்களைக் கொல்லாதேஎன கோஷம் எழுப்பியுள்ளனர்.
இனிய குரல் வளத்தைகொண்டுள்ள மாதங்கியின்பாடல்களின் பெரும்பாலானவைஇலங்கையின் விடுதலைப் போராட்டத்தை பற்றியவையாகவே உள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும்.இவருடைய தந்தையானஅருள்பிரகாசம்ஆரம்பகாலங்களில்விடுதலைப் போராட்டத்தில்தீவிரமாக ஈடுபட்டவர் எனதெரிவிக்கப்படுகின்றது..எம்.ஐ.ஏ. என அழைக்கப்படும் மாயாவின் இயற் பெயர்மாதங்கி அருள் பிரகாசம். இவர்1977ஆம்ஆண்டு ஜூலைமாதம் 17ஆம்
திகதி ஈழத்தில் பிறந்தவர்தனது 11 ஆவது வயதில்லண்டனுக்கு அகதியாகசென்றார். அங்குள்ள மார்ஷல் ஆட்ஸ் அகடமியில்தனது கலை பட்டப்படிப்பைமுடித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப் பாடல்களை இயற்றுவதிலும் அல்பங்களை உருவாக்குவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர் ரப் இசை பாடகியாவார். இவருடைய பாடல்கள்இங்கிலாந்தில் மாத்திரமல்லஅமெரிக்க நாடுகளிலும்பிரபல்யம் ஆகியது.2005 ஆம் ஆண்டு அல்பம்
ஒப் த இயர் விருதை பெற்றார்.கடந்த வாரம் இடம்பெற்றகிரம்மி விருதுக்கும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும்விருது கிடைக்கவில்லைஎனினும் தனது முதல்குழந்தையை வயிற்றில்சுமந்துகொண்டு கிரம்மிவிருதுவழங்கும் விழாவில்பாடல் பாடிஅசத்தியுள்ளார் மாயா.
நிரஞ்சனி
மெட்ரோநியூஸ்
13 02 2009

No comments: