Wednesday, February 4, 2009

நயன்தாராதமிழில் நடிக்க தடை


நடிகை நயன்தாராவை இனி தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது என தயாரிப்பா ளர் சங்கமும் நடிகர் சங்கமும் கூட்டாக அறிவித்துள் ளனலிங்குசாமி இயக்கும் புதிய படம் "பையா'. இதை அவ ருடைய சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ், திருப்பதி பிர தர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாராவை கதா நாயகியாக ஒப்பந்தம் செய்து அதற்கு ரூ.15 லட்சம் அட் வான்ஸ் தொகையும் அளிக்கப்பட்டதுஇந்நிலையில் தான் கொடுத்த கால்ஷீட் தேதிகளின் படி படப்பிடிப்பைத் தொடங்கவில்லை; அதனால் "பையா' படத்திலிருந்து விலகுகிறேன் என நயன்தாரா தெரிவித்தார். படத்தில் நடிக்காததால் தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கேட்டது தயாரிப்பு தரப்பு. ஆனால் அட்வான்ஸ் தொகையைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்றார் நயன்தாராஇதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங் கத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் இரு தரப்பி னரும் புகார் அளித்தனர். அதன்படி இரண்டு சங்கங்க ளின் கூட்டமைப்பும் ஆலோசனை நடத்தியதுஒரு படத்துக்காக தயாரிப்பாளரிடமிருந்து நடிகர்-நடி கையர் முன் பணம் வாங்கியிருந்து, அதில் ஒரு நாளா வது நடித்திருந்தால் அந்த முன் பணத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை என இரு சங்கங்களும் ஏற்கெ னவே ஒப்பந்தம் செய்துள்ளன. ஆனால் நயன் தாரா இந்தப் படத்தில் ஒரு நாள் கூட நடிக்க வில்லைஇதை மேற்கோள்காட்டி, தான் வாங்கிய முன் பணத்தை குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் திருப்பித் தர வேண்டும் என இரு சங்கங்களும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே நயன்தாராவி டம் தெரிவித்தன. ஆனால் காலக்கெடு நெருங்கி யும் அட்வான்ஸ் தொகையை திருப்பித் தர மாட் டேன் என நயன்தாரா தகவல் அனுப்பியுள்ளார்இதையடுத்து நயன்தாராவை இனி தமிழ்ப் படங்களில் ஒப்பந்தம் செய்யக்கூடாது; மேலும் மற்ற மொழிப் படங்களிலும் அவரை நடிக்க வைக்கக் கூடாது என அந்தந்த தயாரிப்பாளர் சங்கங்களில் பேசுவது என முடிவு செய் யப்பட்டுள்ளதுதயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்க மும் இணைந்து புதன்கிழமை நடத் திய கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை அனைத்துத் தயாரிப்பாளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நயன்தாரா விளக்கம்
இந்தப் பிரச்னை குறித்து கேட்ட போது.. ""படத்துக்காக அட்வான்ஸ் தொகையை வாங்கியது உண்மை. அட் வான்ஸ் தொகையைத் திருப்பித் தர மாட்டேன் என்று கூறியதும் உண்மைஇந்தப் படத்துக்காக நான் கொடுத்த கால்ஷீட் தேதிகளைத் தயாரிப்பாளர் பயன்படுத்தவில்லைஎனக்கு வந்த மற்ற பட வாய்ப்புகளை யும் மறுத்துவிட்டு இந்தப் படத்துக்கா கக் காத்திருந்தேன்ஆனால் படப்பிடிப்பையே தொடங் கவில்லை. அதனால் எனக்குத்தான் இழப்பு. இதுகுறித்து பல பத்திரிகைக ளில் செய்திகளும் வெளியாகியுள் ளனமேலும் இந்தப் பிரச்னையில் நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இது வரை என்னை நேரடியாக அழைத்து விசாரிக்கவில்லைஎன் தரப்பு நியாயத்தை முறைப்படி தெரிவிப்பேன்' என நயன்தாரா தெரி வித்துள்ளார்.

No comments: